நீலகிரி சமூக அறக்கட்டளை மற்றும் சர்வ் ஆசியா ட்ரைபல் டிரஸ்ட் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் கண் கண்ணாடி வழங்குதல் நிகழ்வு
நீலகிரி சமூக அறக்கட்டளை மற்றும் சர்வ் ஆசியா ட்ரைபல் டிரஸ்ட் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை மற்றும் கண் கண்ணாடி வழங்குதல் நிகழ்ச்சியானது இன்று எமரால்டு அருகே உள்ள நேரு கண்டி பகுதியில் உள்ள ஜீவ அப்ப ஆலயத்தில் நடைபெற்றது 100ம் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு இலவசமாக கண் பரிசோதனை செய்து கொண்டனர் இதில் தேர்வானவர்களுக்கு கண் கண்ணாடி இலவசமாக வழங்கப்பட்டது மேலும் 15 நபர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது இந்த முகாமில் நீலகிரி சமூக அறக்கட்டளை மற்றும் சர்வ் ஆசியா ட்ரைபல் டிரஸ்ட் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர் விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக நீலகிரி சமூக நல அறக்கட்டளை சேர்ந்த திரு சக்தி ரமணா சுரேஷ் அவர்களும் சர்வ் ஆசியா ட்ரைபல் டிரஸ்ட் சேர்ந்த திரு வி சின்னையா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும் விழாவின் சிறப்பு அழைப்பாளர்களாக நீலகிரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் திரு சகாயராஜ் அவர்களும் செயலாளர் திரு ஜெரால்டு அவர்களும் பொருளாளர் திரு கே எஸ் டி மகேந்திரன் அவர்களும் துணைத்தலைவர் திரு அருள் தாஸ் அவர்களும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு விஜயராஜ் அவர்களும் கலந்து கொண்டனர் மேலும் நீலகிரி எஜுகேஷன் டிரஸ்டைச் சேர்ந்த திரு ஜாபர் அவர்களும் தன்னார்வலர்கள் சந்திரு, கிருத்திக, அவர்களும் கலந்து கொண்டனர் மேலும் எமரால்டு பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திரு சங்கர் அவர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தலைமை செய்தியாளர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு..



No comments:
Post a Comment