சர்வதேச புத்தக வாசிப்பு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது
நீலகிரி மாவட்ட தமிழியக்கம் சார்பில் உதகை சி.எஸ்.ஐ சி.எம்.எம் மேனிலைப்பள்ளியில் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலர் கிளெமெண்ட் தலைமை தாங்கினார். முன்னதாக தமிழியக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி ரமணா சுரேஷ் அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட தமிழியக்கத் தலைவர் அமுதவல்லி,பேராசிரியர் மூர்த்தி லிங்கா கவுடர்,மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை துணை இயக்குநர் விக்னேஷ், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முடிவில் நீலகிரி மாவட்ட தமிழியக்க தகவல் தொடர்பு அலுவலர் தலைவர் ஜாஃபர் புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்த உறுதிமொழியை வாசித்தார். இப்பள்ளி தலைமை ஆசிரியர் ஐரின் மெர்சி நன்றி கூறினார். நிகழ்ச்சியை தமிழியக்க மாணவரணி தலைவர் சுதிர் தொகுத்து வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment