மஞ்சனகொரை பகுதியில் ஒரு வார காலமாக குப்பைகளை ஏற்றும் வாகனம் வராததால் பொதுமக்களுக்கு பாதிப்பு.
நீலகிரி மாவட்டம் உதகை அருகில் உள்ள அண்ணா காலணி பகுதிக்கு அருகாமையில் உள்ள வார்டு எண் 39 மஞ்சனகொரை பகுதியில் ஒருவாரமாக குப்பைகளை ஏற்றும் வாகனம் வராததால் அங்கு குப்பைகள் அதிகமாக சேர்ந்து துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது இதனால் அவ்வழியில் செல்லும் பொதுமக்கள் அனைவரும் முகம் சுளித்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக தூய்மை பணியாளர்களை வைத்து அக்குபைகளை நீக்கி சுத்தம் செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


No comments:
Post a Comment