நேரு நகர் ஶ்ரீ செல்வ விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா
நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு அருகே உள்ள நேரு நகர் பகுதியில் எழுந்தருளியுள்ள ஶ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது இதில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வி பூஜைகள் செய்து விமான கலசம் ஶ்ரீ செல்வ விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது இதில் பல்லாயிர கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முலமுதற் கடவுளான ஶ்ரீ செல்வ விநாயகரை வழிபட்டனர் அனைவருக்கும் ஐயனின் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:
Post a Comment