கூடலூர் பேருந்து நிலையத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், செஞ்சிலுவை சங்க மருத்துவ குழு, ஆல் தி சில்ரன் ஆகியன சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் முன்னிலை வகித்தார் கிளை மேலாளர் தங்கராஜ் முகாமை துவக்கி வைத்தார். முகாமில் செஞ்சிலுவை சங்க மருத்துவ குழு மருத்துவர் ஶ்ரீநாத் தலைமையில் மருந்தளுநர் நவீன், செவிலியர் சுமதி நிர்வாக அலுவலர் லாய்சன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு மற்றும் பொது மருத்துவ பரிசோதனை நடைபெற்றது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment