ஐடிஐ மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்.
கூடலூர் அருகே கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், செஞ்சிலுவை சங்க மருத்துவ குழு ஆகியன சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மைய முதல்வர் ஷாஜி ஜோர்ஜ், இளம் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், செஞ்சிலுவை சங்க நிர்வாகி லாய்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செஞ்சிலுவை சங்க மாவட்ட செயலாளர் மோரிஸ் சாந்தகுருஷ் முகாமை துவக்கி வைத்தார். முகாமில் செஞ்சிலுவை சங்க மருத்துவ குழு மருத்துவர் ஶ்ரீநாத் தலைமையில் மருந்தளுநர் நவீன், செவிலியர் சுமதி உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவ குழுவினர் பயிற்சி மையத்தில் உள்ள 100கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு மற்றும் பொது மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். தேவையுள்ளவர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:
Post a Comment