மசினகுடியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், இந்திய செஞ்சிலுவை சங்க மருத்துவ குழு, ஆல் தி சில்ட்ரன், ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட், நீலகிரி மோட்டார் டிரைவர்ஸ் யூனியன் ஆகியன சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு நீலகிரி மோட்டார் டிரைவர்ஸ் யூனியன் அமைப்பாளர் சுதீஷ் தலைமை தாங்கினார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் முகாமினை துவக்கி வைத்தார்.
ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், நீலகிரி மோட்டர் டிரைவர்ஸ் யூனியன் தலைவர் உன்னிகிருஷ்ணன், செயலாளர் மாதேஷ், சந்தோஷ், இந்திய டிரைவர் அசோசியேஷன் செயலாளர் அசோக்குமார், நுகர்வோர் அமைப்பு பிரதிநிதி தேவஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய செஞ்சிலுவை சங்க மருத்துவ குழு மருத்துவர் நவாஸ் தலைமையில் மருந்தாளுனர் நவீன், செவிலியர் சுமதி, நிர்வாக அலுவலர் லாய்ஷான் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர்.
இம்முகாமில் பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சைகள் மருந்துகள் வழங்கப்பட்டது. ஓட்டுனர்கள் சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment