உதகை அரசு கலைக்கல்லூரி - "கலைத் திருவிழா 2025" –முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசு, உயர் கல்வித் துறை, கல்லூரிக் கல்வி இயக்குநரகம் மற்றும் தமிழ்நாடு உயர்கல்விக் கழகம் (TANSCHE) ஆகியவற்றின் சார்பில், மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நோக்கில், “கலைத் திருவிழா 2025” என்ற சிறப்பு கலாச்சார விழா புதுமையாக தொடங்கப்பட்டுள்ளது.
உதகை அரசு கலைக் கல்லூரியில்
இதன் முதற்கட்ட நிகழ்வுகளாக செப்டம்பர் மாதத்தில் 24 போட்டிகள் நடைபெற்றுள்ளன.
இதன் இரண்டாம் கட்ட நிகழ்வுகளாக, வருகின்ற அக்டோபர் 7ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு உதகை அரசு கலைக் கல்லூரியில்,
1.விவாத மேடை( Debate) ,
2.பொம்மலாட்டம்
( puppet show),
3.அலங்கார வடிவமைப்பு ( Fashion designing),
4.மௌன மொழி நாடகம் ( MIME),
5.குழு நாடகம்
(Role play),
6. புதையல் வேட்டை( Treasure hunt)
போன்ற கலைத் திருவிழாப் போட்டிகள் நடைபெற உள்ளன.
உதகை அரசு கலைக் கல்லூரியில் பயிலும் அனைத்துத் துறை சார்ந்த மாணவ மாணவியர்களும் இப்போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற வாழ்த்துகிறோம்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment