நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மருத்துவமனை வளாகத்தில் கோத்தகிரி ரோட்டரி சங்கம் டயாலிசிஸ் சிகிச்சை மையம் அமைக்க அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
அக்டோபர் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று அரசுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்த நகலை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களிடம் கோத்தகிரி ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வழங்கினார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment