நூருல் இஸ்லாம் மத்ரஸா மற்றும் தர்கா கமிட்டியின் நபி தின ஊர்வலம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 September 2024

நூருல் இஸ்லாம் மத்ரஸா மற்றும் தர்கா கமிட்டியின் நபி தின ஊர்வலம்



நீலகிரி மாவட்டம் மேல் கூடலூர்  நூருல் இஸ்லாம் மத்ரஸா மற்றும் தர்கா கமிட்டி சார்பாக முஸ்லிம்களின் முக்கிய விழாவான மிலாடி நபி மிக சிறப்பாக   கொடியேற்றதுடன் தொடங்கி கொண்டாடப்பட்டது.கமிட்டி தலைவர் பசீர் கொடியினை உயர்த்தினார். தலைமை இமாம் அன்வர் பாகவி உஸ்தாத் விழாவிற்கு தலைமை வகித்தார்.இஸ்லாமிய பெருமக்கள் தங்களது மகிழ்ச்சியினை தெரிவிக்கும் விதமாக மதரஸா குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளுடன்  ஊர்வலமாக சென்றனர்.இதில் பெருந்திரளான இஸ்லாமிய சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஊர்வலமாக சென்றனர். ஜாதி மதம் பாராமல் உள்ளூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இனிப்புகளை வழங்கி இஸ்லாமிய மக்களை வரவேற்று தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இது அப்பகுதி மக்களிடையே மதசார்பு ஒற்றுமையினை குறிக்கும் விதமாக இருந்தது.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌஷாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad