அவலாஞ்சி ஏமரால்டு அணைகளில் நீர்மட்டம் அதிகரிப்பு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 September 2024

அவலாஞ்சி ஏமரால்டு அணைகளில் நீர்மட்டம் அதிகரிப்பு



ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்த இடைவிடாத கனமழை காரணமாக அவலாஞ்சி, எமரால்டு அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து கடல்போல் காட்சியளிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பார்சன்ஸ்வேலி உள்ளிட்ட பல்வேறு அணைகள் உள்ளன. இந்த அணைகளில் உள்ள நீரை கொண்டு 12 நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அது மட்டுமின்றி குடிநீர் உபயோகத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. பருவமழை சமயங்களில் இந்த அணைகள் நிரம்பி விடும். இதனால், மின் உற்பத்தி, குடிநீர் தேவைகளுக்கு பாதிப்பு இருக்காது. அதேபோல, ஊட்டி அருகே அவலாஞ்சி மற்றும் எமரால்டு அணைகள் உள்ளன. இந்த அணைகளில் உள்ள நீரை கொண்டு குந்தா, கெத்தை, பில்லூர் ஆகிய மின் நிலையங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், நடப்பு ஆண்டில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மே மாதம் வரை வரலாறு காண அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.இதன் காரணமாக, மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகளில் நீர்மட்டம் தரைதட்டியது. குறிப்பாக எமரால்டு, அவலாஞ்சி அணைகளில் நீர்மட்டம் சரிந்து வெறும் மண் தரையாக காட்சியளித்தது.


இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடந்த ஜூலை மாதம் தென்மேற்கு பருவமழை துவங்கியது. சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது. ஊட்டி, குந்தா, கூடலூர் பகுதிகளில் நல்ல மழை பொழிவு இருந்தது. இதேபோல், நீர்பிடிப்பு பகுதிகளான அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் வேகமாக நிரம்பியது. 171 அடி கொள்ளளவு கொண்ட அவலாஞ்சி அணை, 184 அடி கொள்ளளவு கொண்ட எமரால்டு அணைகளில் தற்போது 170 அடிக்கும் மேல் தண்ணீர் உள்ளது. இதனால் இதனை பார்க்கும் போது கடல் போல் காட்சியளிக்கிறது. தற்போது, அடுத்த மாதத்தில் இருந்து வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் அணை முழு கொள்ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad