தமிழகத்தில் ஆண்டிற்கு, 14 கோடி கிலோ தேயிலை துாள் உற்பத்தி செய்யப்படும் நிலையில், 90 சதவீதம் நீலகிரியில் உற்பத்தியாகிறது.
பொதுவாக பசுந்தேயிலை மகசூல் அக்., நவ., மாதங்களில் அதிகமாகவும், ஜன., முதல் ஏப்., வரை குறைவாகவும் இருக்கும்.
போதுமான மழைக்கு பிறகு ஒரு நாளைக்கு, 4 மணி நேரம் சூரிய ஒளி இருந்தால் பசுந்தேயிலைக்கு நோய் பாதிக்காது. இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதத்தில் இருந்து தொடர்ந்து பல நாட்கள் கன மழை பெய்தது. தொடர்ந்து போதிய சூரிய ஒளியும் கிடைத்தது.
உபாசி வேளாண் ஆராய்ச்சி மைய உதவி இயக்குனர் முருகேசன் கூறுகையில்,''மழையை தொடர்ந்து சூரிய ஒளி அதிகம் இருந்ததால், இந்த மாதம் பசுந்தேயிலை மகசூல், 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கும்,''என்றார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment