கோத்தகிரி காப்பு காட்டில் புகுந்த ஐந்து மர்ம நபர்கள்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு வன சரகத்திற்கு உட்பட்ட கர்சன் வேலி பகுதியில் கடந்த ஐந்தாம் தேதி வனத்துறைக்கு சொந்தமான காப்பு காட்டில் சில மர்ம நபர்கள் புகுந்து கற்பூர மரங்களை வெட்டி எடுத்ததாகவும் மேலும் ஏர்கன் எனப்படும் துப்பாக்கி எடுத்துச் சென்று வனப்பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பெயரில் இதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் கௌதம் உத்தரவின்படி கோத்தகிரி வனச்சரகர் செல்வராஜ் தலைமையில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர் இந்நிலையில் கடந்த ஏழாம் தேதி சந்தேகத்தின் பெயரில் ஐந்து பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இவர்கள் ஐந்து பேரையும் குன்னூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment