நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் பல பள்ளிகள் உள்ளன. சிறு குழந்தைகள் முதல் பெரிய மாணவ மாணவிகள் பள்ளி வாகனங்களில் செல்கின்றனர். தற்போது மழை பெய்துவரும் நிலையில் கோத்தகிரி டவுன் பகுதிகளில் வாகனநெரிசல் காரணமாக நேரத்தை சமன்செய்ய கிராமப்பகுதிகளில் பள்ளி வாகனத்தை வேகமாக இயக்குவதாக கிராம பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment