நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது நெடுகுளா கிராமம் சுற்றுவட்டாரத்தில் உள்ள பத்திற்க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து வரும் மாணவ மாணவிகளுக்காக அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. தற்போது தமிழுடன் ஆங்கில வழிக் கல்வியும் இணைந்து கற்பிக்கப்படுகிறது.
தற்போது நெடுகுளா அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தை சுற்றி காட்டுச்செடிகள் முளைத்து புதர்மண்டி கிடக்கிறது இந்த செடிகள் வகுப்புகள் நடைபெறும்போது ஜன்னல் திறந்தால் வெளிச்சம் வர முடியாத அளவிற்க்கு வளர்ந்துள்ளதால் விஷ ஜந்துக்களின் அபாயம் உள்ளது.
எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து பதர்பகுதியை சீரமைப்பதுடன் மேற்கூரையையும் சீரமைக்கவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K. A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.



No comments:
Post a Comment