கோத்தகிரி, ஒரசோலை அரசு நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆர் . நஞ்சுண்டன் தலைமையில் சுதந்திர தின விழா நடைபெற்றது. கோத்தகிரி பேரூராட்சி கவுன்சிலர் தேவகி பெரியசாமி தேசிய கொடி ஏற்றினார் . பேச்சு, ஓவியம், கட்டுரை, பாடல், கையெழுத்து, வினாடி, வினா மற்றும் நடன போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது . ஊர் பெரியவர் காரி, ஆசிரியைகள் சகுந்தலா, ராதிகா, மருத்துவர் திவ்யா, பாதுகாப்பு மைய கனகா, பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். ஆசிரியர் ராமலிங்கம் வரவேற்றார். ஆசிரியை கமலா நன்றி கூறினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக கோத்தகிரி தமிழகுரல் செய்தியாளர் C விஷ்ணுதாஸ்



No comments:
Post a Comment