நீலகிரி மாவட்டம் VBN பகுதியில் மின் கம்பம் சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது
நீலகிரி மாவட்டம் இத்தலார் ஊராட்சிக்கு செல்லும் வழியில் (VPN ) என்னும் பகுதி உள்ளது அங்கு சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போது ஐந்து நாட்களாக தொடர்ந்து காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் வி பி என் பகுதியில் உள்ள ஜோதி ஸ்டோர் என்னும் கடையின் அருகே மின்கம்பம் சாய்ந்து கீழே விழுகும் அபாய நிலையில் உள்ளது. இதனை அறிந்த விபின் ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த 18-07-2024 அன்று பாலடா மின்சார வாரியம் அலுவலகத்திற்கு சென்று ஊர் பொதுமக்கள் 21 பேர் கையெழுத்து இட்டு மனு அளித்தனர். மனு அளித்தும் இதுவரை மின்சார வாரியம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் ஊர் பொதுமக்கள் மின்கம்பம் சாய்ந்து பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment