நீலகிரி மாவட்டம் உதகை குன்னூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் திருடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...
நீலகிரி மாவட்டம் உதகை குன்னூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் திருடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது 20 நாட்களுக்கு முன்பு ரேஸ் கோர்ஸ் கிரௌண்டில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள நகராட்சி கடைகளை உடைத்து திருட்டு நடந்தது. இதனைத் தொடர்ந்து மாரியம்மன் கோயில் முன்புள்ள நகராட்சி மார்க்கெட்டில் ஐந்து நாட்களுக்கு முன்பு சுமார் பத்து கடைகளில் பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டது. தொடர்ந்து ஆய்வு செய்த காவல்துறையினர் இரவு பணியில் இருக்கும் நகராட்சி காவலர் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனாலும் நேற்று இரவு ரேஸ் கோர்ஸ் பகுதியில் நகராட்சியில் அனுமதிக்கப்பட்டுள்ள அதே கடைகளில் திரும்பவும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. எனவே வியாபாரிகளின் கேள்வி என்னவென்றால் உடைக்கப்பட்ட கடைகள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நபரா அல்லது வேறு நபர்களா என்று தீர விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment