இன்று நீலகிரி மாவட்டம் பந்தலூர் பஜாரில் கொட்டும் மழையில் CPIM கட்சி சார்பாக மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்திற்கு CPIM கட்சியினுடைய ஏரியா கமிட்டி செயலாளர் தோழர் ரமேஷ் அவர்கள் தலைமை ஏற்று வழி நடத்தி சிறப்புரை நிகழ்தினார் ,இப்போராட்டத்தில் DYFI எரியாகமிட்டி தலைவர், க,பெரியார்மணிகண்டன் வரவேற்ப்புரை நிகழ்தினார்,
தேவாலா கிளைச் செயலாளர் ஷாஜி உப்பட்டி கிளைசெயலாளர் தோழர் ராஜகோபால் முன்னனி பொறுப்பாளர் தோழர்கள் குமாரன் ரசீது , சசி, பாப்புட்டி மற்றும் பலர் கலந்துக்கொண்டனர் தொழிற்சங்க மாவட்ட உறுப்பினர் தோழர் சம்சுதீன் நன்றி கூறினார் தமிழக அரசு உடனடியாக இந்த மின் கட்டண உயர்வை வாபஸ் செய்ய வேண்டும் எனவும் பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் அடிக்கடி மின்இனைப்பு துண்டிக்கபடுவதால் மக்கள் அன்றாட வேலைகள் பதிக்கபடுகிறது அரசு உடனே போதிய உழியர்களை நியமிக்க வேண்டும் என இவ்ஆர்ப்பாட்ட வாயிலாக கேட்டுக்கொள்ளப்பட்டது தமிழக முழுவதும் இன்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒரு பகுதியாக பந்தலூர் பஜாரிலும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment