நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கெச்சிகட்டி ஹட்டியை சேர்ந்த KMS குடும்பத்தை சேர்ந்த திரு.ஹால்துரை, திருமதி.கண்ணம்மாள் ஆகியோரின் பேரனும் திரு. தீபக், திருமதி. மாயா ஆகியோரின் மகனும் ஆனவர் அக்குள் தீபக்.
கால்பந்து வீரரான இவர் கெச்சிகட்டிக்கு ஏகப்பட்ட கோப்பைகள் பெற்றுத்தந்தவர். தமிழக குரல் செய்தியாக வெளியிட்டதில் பாராட்டுக்கள் கெச்சிகட்டி அணிக்கு குவிந்தது.
சிறப்பாக கால்பந்து விளையாடும் அக்குள் தீபக் ஒசூர் பள்ளியில் பயில்கிறார். ஏற்கனவே கால்பந்து போட்டிகளுக்காக துபாய் சென்று சிறப்பாக விளையாடி பெறுமைசேர்த்தார்.
தற்போது 15 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில கால்பந்து அணியில் கர்நாடக மாநில அணிக்காக தேர்வாகி சத்தீஸ்கர் மாநிலத்திற்க்கு புறப்பட்டுச்சென்றார்.
அக்குள் தீபக்கின் இந்த சாதனையை கெச்சிகட்டி மற்றும் சுற்றுவட்டார எட்டூர் மக்கள் பாராட்டியதுடன் நீலகிரி மாவட்ட மக்களின் வாழ்த்துக்கள் குவிகின்றன.
அக்குள் தீபக் அவர்களுக்கு தமிழக குரல் செய்திகுழுமம் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment