தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சார்பில் கோத்தகிரி சி.எஸ்.ஐ மேல்நிலைப் பள்ளியில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 4 July 2024

தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சார்பில் கோத்தகிரி சி.எஸ்.ஐ மேல்நிலைப் பள்ளியில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது


 தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சார்பில் கோத்தகிரி சி.எஸ். ஐ மேல்நிலைப் பள்ளியில்  போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  இந்நிகழ்வில்  கோத்தகிரி கேர் அறக்கட்டளை நிர்வாகி திரு. வினோபா பாப், கீஸ்டோன் தொண்டு நிறுவனத்தின் ரேடியோ கோத்தகிரி  ஹரி மாணிக்கம் மற்றும் அலுவலக பணியாளர்கள், நாவா அறக்கட்டளை  மருத்துவர் திருமூர்த்தி, நீலகிரி மக்கள் நற்பணி மையத் தலைவர்  கன்டோன்மென்ட் வினோத்குமார் , போபியோ பவுண்டேஷன் தலைவர் " நீலகிரியின் மாயக்குரல் " மோகன்ராஜ் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கினர்.  





தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் சுரேஷ் ரமணா  அனைவரையும் வரவேற்றார்.   போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து வினோபாப் , ஹரி மாணிக்கம், திருமூர்த்தி   மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர், மோகன்ராஜ் அவர்களின்   பொம்மை நாடகம் விழிப்புணர்வு கொடுத்தது மாணவர்களை உற்சாகமடைய வைத்தது. நிகழ்ச்சியின் நிறைவில்  திரு கன்டோன்மென்ட் வினோத்குமார் அவர்கள் நன்றி உரையாற்றினார்.

 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad