நமது ஊட்டியில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் சாலை ஓர சாக்கடைகள் அடைப்பு ஏற்படுகிறது இதனை அதிகாரிகள் மழைக்காலம் என்று கூட பொருட்படுத்தாமல் மக்களுக்கு பாதிப்பு அடையாத வகையில் தூய்மை பணியாளர்களை வைத்து சுத்தம் செய்து தருகின்றனர்
இதில் இன்று ஊட்டியில் கொட்டுகின்ற மழையிலும்... கடும் குளிரிலும்.... நமது 18வது வார்டில் சாந்திவிஜயா பள்ளி முன்புறம் எட்டின்ஸ் சாலை ஓர கால்வாய் அடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர்தேங்கக்கூடாது என்பதற்காக.....
நமது நகராட்சி தூய்மைப்பணி மேஸ்திரி தம்பி மனோகரன் அவர்களின் மேற்பார்வையில் நகராட்சி தூய்மைப்பணி நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment