குன்னூர் அரசு மருத்துவமனை அருகே சேதமடைந்த நடை பாதையால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 1 July 2024

குன்னூர் அரசு மருத்துவமனை அருகே சேதமடைந்த நடை பாதையால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதி

       


      நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி ஆறாவது வார்டு பகுதியில் அரசு மருத்துவமனையை ஒட்டியுள்ள நடைபாதை பல ஆண்டுகளாக சிதலமடைந்து குப்பை கூடங்களுடன் காட்சியளிப்பதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர் 


மேலும் சமீபத்தில் பெய்த கனமழையால் நடைபாதையில் அரிப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது இதனால் அந்தப் பகுதியில் கொசு தொல்லைகள் மற்றும் விஷஜந்துக்கள் அதிகரித்து காணப்படுகிறது.  மவுண்ட் ரோடு சாலையிலிருந்து சிம்ஸ் பூங்கா வரை செல்பவர்கள் மேற்கண்ட நடை பாதையை பயன்படுத்தி வந்தனர் மேலும் அங்கு தனியார் பள்ளிகள் மற்றும் எண்ணற்ற குடியிருப்புகள் உள்ளன எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நடைபாதயை சீரமைப்பதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad