நீலகிரி மாவட்டம் மைனலா ஹட்டியை சேர்ந்த திரு. D. குமார் அவர்களின் மகன் ஆன K. தீக் ஷித் அவர்களும் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில கால்பந்து அணியில் கர்நாடக மாநில கால்பந்து அணிக்காக தேர்வாகியுள்ளார். இவர் தூனேரி குருகுலம் பள்ளி மாணவர் ஆவார்.
இவருக்கு ஊர்சார்பிலும் பள்ளிசார்பிலும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
நீலகிரியில் இருந்து அக்குள் தீபக் மற்றும் தீக் ஷித் என இருவர் கர்நாடக மாநில 15 வயதுக்கு உட்பட்டோர் கால்பந்து அணியில் தேர்வாகி சத்தீஸ்கர் மாநிலத்திற்க்கு செல்வது நீலகிரி மாவட்ட மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment