நீலகிரி மாவட்டத்தின் உதகை மத்திய காவல் நிலையம் இந்த ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சரின் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை உதகை மத்திய காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் அவர்கள் பெற்றுக்கொண்டார். மற்றும் அந்த விருதினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. சுந்தரவடிவேலு அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
இந்த விருதை பெற்ற உதகை மத்திய காவல் நிலையம் மற்றும் அதில் பணிபுரியும் காவல்துறை நண்பர்களுக்கு தமிழக குரல் இணையதள செய்தி பிரிவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் உங்களது பணி சிறப்பித்து மேலும் மேலும் நமது நீலகிரி மாவட்டத்திற்கு விருதுகளை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment