நீலகிரி மாவட்டம் காடுகள் சூழ்ந்த பகுதியாகும் முதுமலை வனப்பகுதி புலிகளின் சரணாலயமாகும்.
சமீப காலமாக வனவிலங்குகள் ஊருக்குள் வருவது தொடர்கதையாக உள்ளது.சிறுத்தை, கரடி, காட்டுமாடு ஆகியவை மக்களோடு பழகி விட்டது. யானைகள் மட்டும் அவ்வப்போது சாலையை மறித்து நிற்கும்.
தற்போது புலிகள் சர்வசாதாரணமாக சாலையில் உலாவருவது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
நேற்று அவலாஞ்சி பகுதியிலும் இன்று மசினகுடி பகுதியிலும் புலி எந்தவிதமான அச்சமின்றி ஹாயாக சாலையை கடந்துசெல்லும் காட்சி வாகன ஓட்டிகளால் படம் பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஆகவே வாகனங்களில் செல்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment