தென்மேற்கு பருவமழையினால் சேதமடைந்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்...
நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம் நஞ்சநாடு ஊராட்சிக்கு உட்பட்ட போர்த்தியாடா என்னும் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் சேதம் அடைந்த வீடுகள் அமைந்துள்ள பகுதிகளை இன்று (19-07-2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு கொண்டு பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து திமுக சார்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் நிதியுதவி வழங்கினார். அவருடன் மாவட்ட ஆட்சியர் திருமதி லக்ஷ்மி பவியா தண்ணீரு இ அ ப அவர்கள் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி திரு கௌசிக் இ ஆ பா உதவி நகர செயலாளர் திரு ஜார்ஜ் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment