நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த உதவி ஆய்வாளர் பிரகாஷ், முக்தார் மற்றும் நேஹா அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
49வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், உதகை ஜி1 காவல் நிலைய உதவி ஆய்வாளர் சகோதரர் பிரகாஷ் 1 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என மொத்தம் 2 பதக்கங்கள் வென்றுள்ளார்.
முக்தார் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
முக்தார் அவர்களின் மகள் நேஹா, தென்னிந்திய துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் எனவும் கூறப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்திலிருந்து பிரகாஷ், முக்தார் மற்றும் நேஹா ஆகிய 3 பேர், தென்னிந்திய துப்பாக்கி சுடும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது நமது நீலகிரி மாவட்டத்திற்கு மிகுந்த பெருமையே.மென்மேலும் இவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
கோத்தகிரி லிருந்து தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment