நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த உதவி ஆய்வாளர் பிரகாஷ், முக்தார் மற்றும் நேஹா அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 23 July 2024

நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த உதவி ஆய்வாளர் பிரகாஷ், முக்தார் மற்றும் நேஹா அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.




நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த உதவி ஆய்வாளர் பிரகாஷ், முக்தார்  மற்றும் நேஹா அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.


 49வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், உதகை ஜி1 காவல் நிலைய உதவி ஆய்வாளர்  சகோதரர் பிரகாஷ் 1 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என மொத்தம் 2 பதக்கங்கள் வென்றுள்ளார்.

முக்தார்  வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

முக்தார் அவர்களின் மகள் நேஹா, தென்னிந்திய துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் எனவும் கூறப்படுகிறது.



நீலகிரி மாவட்டத்திலிருந்து பிரகாஷ், முக்தார் மற்றும் நேஹா  ஆகிய 3 பேர், தென்னிந்திய துப்பாக்கி சுடும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்  என்பது நமது நீலகிரி  மாவட்டத்திற்கு மிகுந்த பெருமையே.மென்மேலும் இவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.


கோத்தகிரி லிருந்து தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad