கோத்தகிரி - கன்னேரிமுக்கு சாலையோர முட்புதர்கள் அகற்றம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 25 July 2024

கோத்தகிரி - கன்னேரிமுக்கு சாலையோர முட்புதர்கள் அகற்றம்



நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து கன்னேரிமுக்கு செல்லும் பிரதான சாலையை நம்பி மசகல் கூக்கல்தொரை மார்வளா கூக்கல் ஆகிய பகுதிகள் உள்ளன பள்ளி வாகனங்கள் பொது வாகனங்கள் மற்றும் மலைகாய்கறிகள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் தேயிலை தொழிற்சாலை வாகனங்கள் சுற்றுலாவாசிகளின் வாகனங்கள் என எப்போதுமே இந்த சாலை பரபரப்புடன் காணப்படும்.



சாலையோரங்களில் முட்புதர்கள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்திருந்த நிலையில் அதை அகற்றும் பணியில்  நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு ஒருவார காலமாக சீரமைத்துள்ள நிலையில் வாகனங்கள் சிரமமின்றி சென்றுவருவதுடன் வளைவில் எதிரே வரும் வாகனங்கள் தெரிகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad