நிழற் குடையில் மழைக்கு கூட ஒதுங்க முடியவில்லை என்று மக்கள் புலம்பல் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 26 July 2024

நிழற் குடையில் மழைக்கு கூட ஒதுங்க முடியவில்லை என்று மக்கள் புலம்பல்




நீலகிரி மாவட்டம் குன்னூர்  கேத்தி பகுதியில் சாரல் மழையுடன் பலத்த காற்று வீசிவரும் நிலையில் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வந்து நிழற் குடையில் நின்று அமர்ந்து அதன் பிறகு தான் பேருந்து ஏறி தங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு பயணம் செய்யகின்றனர் . இந்நிலையில்   கேத்தி பேரூந்து  நிலையத்தின் உள்ளே பேரிகார்டுகள் வைத்துள்ளதால் மக்கள் பேரூந்து  நிழல் குடையில்  மழைக்கு கூட ஓதுங்க முடியாமல் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர் காவல்துறை நண்பர்கள் உடனடியாக  கேத்தி பேருந்து நிலையத்திற்கு சென்று நிழற் குடையில் உள்ள பேரிகார்டுகளை அகற்றி மாற்று இடங்களில் வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.        


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad