நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட எமரால்டு பகுதி அருகாமையில் உள்ள நேரு நகர் என்ற ஊரில் தொடர்ந்து காற்றுடன் கூடிய கனமழை ஒரு வார காலமாக பெய்து வருவதால் மூன்று வீடுகள் தற்போது இடிந்துள்ளது. வீடு இடிந்தவர்களை மாற்று வீட்டிற்கு செல்லுங்கள் என்றும் இல்லையெனில் பெரியார் நகர் பகுதியில் அமைத்து தரப்பட்டிருக்கும் முகாமிற்கு செல்ல வேண்டும் என்று குந்தா தாலுகா தாசில்தார் கூறியுள்ளார். மற்றும் வீடுகளில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு பாதிப்பு ஒன்றும் இல்லை என தெரியவந்துள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment