தமிழக பத்திரிகையாளர் சங்கத்தின் நீலகிரி மாவட்ட சங்க உறுப்பினர்களின் பதவி ஏற்பு விழாவும் புதிய உறுப்பினர்களின் சேர்க்கையும் இன்றைய தினத்தில் நீலகிரி மாவட்டம் உதகை அடுத்துள்ள கீஸ் ரெஸ்டாரண்டில் இனிய முறையில் நடைபெற்றது..
இதில் 30-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் இதில் பத்திற்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் பதவியேற்று சங்கத்தை இனிய முறையில் துவங்கி வைத்தனர் இதற்கு சிறப்பு அழைப்பாளராக நமது தமிழக பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு பாஷா அவர்கள் கலந்து கொண்டார் இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு நீலகிரி மாவட்ட தலைவர் திரு சகாயராஜா அவர்கள் முன்னிலை வகித்தார் செயலாளர் திரு ஜெரால்டு அவர்கள் தலைமையில் இந்த கூட்டமானது இனிய முறையில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு இறுதியில் நீலகிரி மாவட்டத்தின் பொருளாளர் திரு கே எஸ் டி மகேந்திரன் அவர்கள் நன்றியுரை கூறினார் இனிய முறையில் மதிய உணவிற்கு பின் இந்த கலந்தாய் கூட்டமானது நிறைவு பெற்றது இந்த கலந்தாய் கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு இலவசமாக வழங்கப்படுவது என முடிவு எடுக்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment