கன்னேரிமுக்கு பகுதியில் மோட்டார் மின் ஒயர் திருட்டு தொடர்கதை. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 2 July 2024

கன்னேரிமுக்கு பகுதியில் மோட்டார் மின் ஒயர் திருட்டு தொடர்கதை.



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியில் கடந்த வாரம் பிரவீன் என்பவரது வீட்டிற்கு வரும் மின் மோட்டார் ஒயர் 70 மீட்டர்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டது. நேற்றிரவு தக்ஷிணாமூர்த்தி என்பரது மின் மோட்டார் ஒயர் 30 மீட்டர்கள் அளவு மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. 


தக்ஷிணாமூர்த்தி, பிரவீன் இருவரும் கோத்தகிரி காவல் நிலையத்தில் காவலர் திரு. ஆனந்த் அவர்களிடம் புகாரளித்தனர்.கோத்தகிரி காவல் உதவி ஆய்வாளர் திரு. யாதவகிருஷ்ணன் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டார். 


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad