ஐந்து கார், மினி பேருந்து, மற்றும் இரு சக்கர வாகனம் மீது மரம் விழுந்து கடும் சேதம்...நீலகிரி மாவட்டத்தில் மழையின் தாக்கம் குறைந்த நிலையில் இன்று உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று உதகையில் வீசி வரும் காற்றின் காரணமாக கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மஞ்சனக்கொரை, பெர்ன் ஹில், தோடர் இன மந்து உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றின் காரணமாக வேரோடு சாய்ந்த மரங்கள், சாலையில் சென்ற கார்களும் நிறுத்தி வைக்கப்பட்ட ஐந்து கார்களும் பலத்த சேதம் இதில் காயமின்றி வாகனத்தில் வந்தவர்கள் உயிர் தப்பினர், மினி பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்கள் மீதும் மரம் விழுந்துள்ளதால் வாகனங்கள் கடும் சேதம் அடைந்துள்ளன.
தொடர்ந்து உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதால் பொதுமக்களினா இயல்பு வாழ்கை கடும் பாதிக்கப்பட்டுள்ளது.
. தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment