ரூ.24.57 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 180 புதிய குடியிருப்புகள் திறப்பு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 22 July 2024

ரூ.24.57 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 180 புதிய குடியிருப்புகள் திறப்பு



சென்னை, தலைமைச் செயலகத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், நீலகிரி மாவட்டம், கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட அவலாஞ்சி பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.24.57 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 180 புதிய குடியிருப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக இன்று (22.07.2024) திறந்து வைத்ததை தொடர்ந்து,  நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.  ஆ.இராசா, சுற்றுலாத்துறை அமைச்சர் கா. இராமசந்திரன்  குத்துவிளக்கேற்றி வைத்து, குடியிருப்புகளை பார்வையிட்டனர்.



 உடன் மாவட்ட ஆட்சியர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கௌசிக் இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஊராட்சித்தலைவர் திரு.பொன்தோஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என். வினோத் குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad