மீட்பு குழுவினருக்கு பாராட்டு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 24 July 2024

மீட்பு குழுவினருக்கு பாராட்டு



நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுக்கா பாலவயல் பகுதியில் உள்ள பொன்னானி ஆற்றில் மீன்பிடிக்க சென்றவர்களை வெள்ளம் அடித்துச் சென்ற குணசேகரன் மற்றும் கவியரசன் இவர்களில் குணசேகரனின் உடல் ஏற்கனவே மீட்கப்பட்ட நிலையில் கவியரசனின் உடல் 22 ஆம் தேதி மீட்கப்பட்டது.


இது குறித்த புதிய தகவல் கவியரசன் உடலை ஆற்றில் கடந்த மூன்று நாட்களாக தேடியும் கிடைக்காத நிலையில் ஊர் பொதுமக்களால் கேரள மாநிலம் கல்பட்டா  தூர்க்கி ஜீவன் ரக்ஷா சமிதி என்ற மீட்பு குழு தலைவர் ஷிஹபு  நாஷா தலைமையில் 11 உறுப்பினர்கள் கொண்ட குழுவிற்கு அழைப்பு விடுத்தனர் அதில் குழு உறுப்பினர்கள் நிஷாது ரசூல் ஹம்சா ஹரிஷ் ரஹீசு அனூப் மன்சூர் சாலிப் ஷாஹித் அஜாஸ் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவர்கள் மீட்பு பணியை துவக்கிய 30 நிமிடங்களில் கவியரசன் உடலை வெள்ளத்தில் மூழ்கிய இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் ஆழத்திலிருந்து மீட்டனர். 


இந்த சிறப்பு குழுவினருக்கு ஊர் பொதுமக்கள் அனைவரும் பாராட்டை தெரிவித்தார்கள் காங்கிரஸ் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் நெலாக்கோட்டை ஊராட்சி வார்டு உறுப்பினர் எம் ஏ அஷ்ரப் மீட்பு குழுவினருக்கு சால்வை நினைத்து சிறப்பு செய்தார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad