உதகையில் குடியிருப்புக்குள் நுழைந்த சிறுத்தை புலி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 2 July 2024

உதகையில் குடியிருப்புக்குள் நுழைந்த சிறுத்தை புலி




 உதகையில் குடியிருப்புக்குள் நுழைந்த சிறுத்தை புலி வீட்டு வாசலில் தொங்கவிடப்பட்டிருந்த பூந்தொட்டிகளை தொட்டு விளையாடியதுடன் செருப்பை கவ்வி சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளது.


 நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து குன்னூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ள ஃபன்சிட்டி என்னும் குடியிருப்பு பகுதியில் கடந்த 30 ஆம் தேதி நள்ளிரவு இறைத்தேடி சிறுத்தை புலி ஒன்று வீட்டிற்குள் புகுந்துள்ளது. பின்னர் அங்குள்ள ஒரு வீட்டின் நுழைவு வாயிலில் அலங்காரமாய் தொங்கவிடப்பட்டிருந்த பூந்தொட்டியை தொட்டு தொட்டு சிறிது நேரம் விளையாடியது. பின்னர் அங்கு இறை ஒன்றும் இல்லை என்பதை அறிந்த அந்த சிறுத்தை புலி வீட்டின் வாசலில் இருந்த செருப்பை கவ்வி சென்றது சிசி டிவியில் பதிவானது. இந்த காட்சிகளை வீட்டின் உரிமையாளர் தற்போது வனத்துறையிடம்  பாதுகாப்பு வேண்டும் எனக் கூறி அவரிடம் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து சிறுத்தை புலிகள் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad