நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒருமாத காலமாக கனமழை பெய்ததில் மாவட்டமே திக்குமுக்காடியது. உதகை படகு இல்லம் பகுதியில் ஆடிக் காற்றுக்கு மரம் விழுந்து படகு இல்ல சுற்றுலா ரயில் மற்றும் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட கார்கள் சேதமடைந்தது.
ஜூலை25, 26 ஆகிய இரண்டு நாட்கள் நீலகிரிக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே மழை காரணமாக உதகை படகு இல்லத்தில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment