நீலகிரி -இரண்டாம் சீசனுக்கு மலர்நாற்றுக்கள் நடவு பணி தொடங்கிவைத்த ஆட்சியர். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 26 July 2024

நீலகிரி -இரண்டாம் சீசனுக்கு மலர்நாற்றுக்கள் நடவு பணி தொடங்கிவைத்த ஆட்சியர்.



நீலகிரி மாவட்டத்தில் மார்ச் முதல் ஜூன் வரை முதல் சீசன் நடைபெறும் மே மாதம் நீலகிரி மாவட்டம் சுற்றுலா பயணிகளால் நிறம்பி வழியும். ஜூன் மாதம் பள்ளிகள் திறந்தவுடன் நீலகிரியில் கூட்டம் குறையும். அடுத்ததாக இரண்டாம் சீசன் செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் முதல் சீசனில் நீலகிரிக்கு வந்தவர்கள் மற்றும் வராதவர்கள் இரண்டாம் சீசனில் வருவார்கள்.


உலக பிரசித்தி பெற்ற உதகை பூங்காவில் இரண்டாம் சீசனுக்காக மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி. லஷ்மி பவ்யா தண்ணீரு அவர்கள் தொடங்கிவைத்தார், தோட்டக்கலை உதவி இயக்குநர் சிபிலா மேரி அவர்கள் உடனிருந்தார்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad