நமது இந்திய நாட்டிற்க்காக தங்களது உயிரையும் துச்சமென நினைத்து இந்திய ராணுவவீரர்கள் பணிபுரிகின்றனர். நாம் நமது இல்லங்களில் நிம்மதியாக இருக்க நமக்காக நாட்டு எல்லைகளில் பனி புயல் இயற்கைசீற்றம் என எல்லாவற்றையும் தாண்டி ஆயுதங்களுடன் காத்திருந்து நாட்டை காப்பாற்றிக்கொண்டிருக்கின்றனர்.
கடந்த 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நுழைவதை கண்ட இந்திய ராணுவத்தினர் கார்கில் பகுதியில் கடுமையாக போரிட்டு வெற்றியை தேடித்தந்தனர். இன்று கார்கில் போர் வெற்றியின் 25 ஆண்டு வெற்றிநாளாகும்.
கார்கில் போரில் வெற்றிக்காக போராடும்பொழுது இன்னுயிரை நாட்டிற்க்காக நீத்த நமது ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்.ஜெய் ஹிந்த். பாரத் மாதாகி ஜெய்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment