பொன்னானி ஆற்றில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் அறிவித்த நிவாரண நிதியை நேரில் சென்று வழங்கினார்கள்...
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா. ராமச்சந்திரன் அவர்கள், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.இராசா அவர்கள் ஆகியோர் நேற்று மாலை அவர்களை சந்தித்து கூடலூர் கோகால் பகுதிகளை பார்வையிட்டு, பந்தலூர் வட்டம் சேரங்கோடு கிராமம் பாலவயல் பகுதியில் உள்ள பொன்னானியாற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினர் நேரில் அவரின் இல்லத்தில் பிதர்காடு சந்தகுன்னு சந்தித்து, ஆறுதல் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 இலட்சம் காசோலை வழங்கினார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment