சாண்டி நல்லா பகுதியில் வீசிய பலத்த காற்றால் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் வாகனம் மற்றும் வீடுகள் மீது சாய்ந்தது
நீலகிரி மாவட்டம் சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சாண்டி நல்லா என்னும் பகுதியிள் சுமார் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போது ஐந்த நாட்களாக தொடர்ந்து காற்றுடன் கூடிய கனமழை பெய்தது மட்டுமின்றி நேற்று இரவு காற்றின் கோரத்தாண்டவத்தால் அங்குள்ள மரங்கள் வாகனங்கள் மீதும் சாலைகளிலும் வீட்டின் கூரைகளில் மீதும் விழுந்துள்ளது மற்றும் காற்றினால் மின்கம்பம் சாய்ந்து வீட்டின் மேல் விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விழுந்திருக்கும் மரங்கள் மற்றும் மின்கம்பங்களை அகற்றி சீர் செய்து தருமாறு ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment