ஓய்வு பெற்ற சமையலருக்கு பழங்குடியின மாணவர்கள் வழி அனுப்பு விழா நடத்தினார்கள். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 5 July 2024

ஓய்வு பெற்ற சமையலருக்கு பழங்குடியின மாணவர்கள் வழி அனுப்பு விழா நடத்தினார்கள்.



 நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பென்னை  வனப் பகுதியில் அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 30 ஆண்டுகளாக சமையலராக பணியாற்றி வந்த சுசீலா என்பவர் பணி ஓய்வு பெற்றார்.



 தொடர்ந்து அவருக்கு பள்ளி மாணவர்கள் இணைந்து பிரிவு உபசார விழா நடத்தினார்கள். நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன் தலைமை வகித்தார். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜன், ஆசிரியர் ஹில்டா மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் இணைந்து ஓய்வு பெற்ற சமையலருக்கு நினைவு பரிசு வழங்கி, சால்வை போர்த்தி கௌரவித்து வழி அனுப்பி வைத்தனர். 


நிகழ்ச்சியில் அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டதுடன், ஓய்வு பெற்ற சமையலறையின் குடும்பத்தினரும் கவுரவிக்கப்பட்டனர் .நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பழங்குடியின பெற்றோர்கள் பங்கேற்றனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

No comments:

Post a Comment

Post Top Ad