நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பேருராட்சிகுட்பட்ட செல்வபுரம் முதல் பாரதிநகர், பழைய காவல் நிலையம் வரை உள்ள பேரூராட்சி சாலைகள் மற்றும் பாரதிநகர் மரப்பாலம் சாலைகள் பெரும் குண்டும் குழியுமாக மாறி வாகனங்கள் செல்ல மிகவும் சிரமமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் குடிநீர் குழாய்கள் அமைக்க பேரூராட்சி ஒப்பந்ததாரர்களால் சாலை நடுவில் தோண்டப்பட்ட கால்வாய் போன்ற குழிகளும் ,வாகனம் இறங்கி செல்ல பெரும் அல்லல் படுகிறார்கள்.
எனவே மேற்காணும் சாலைகளில் உள்ள குழிகளையும் கால்வாய்களையும் வாகனங்கள் போகுமளவுக்கு அகலப்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment