பந்தலூர் நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ..? - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 7 July 2024

பந்தலூர் நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ..?



நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பந்தலூர் நியாய விலை கடைகளில் அத்தியாவசிய தேவையான அரிசி பருப்பு சர்க்கரை பாமாயில் மண்ணெண்ணெய் இத்தகைய பொருட்களில் வெறும் அரிசியும் சர்க்கரை போன்ற ஒரு சில பொருட்கள் மட்டுமே உள்ளது என்று நியாய விலை கடைக்காரர்கள் கூறுகையில் மக்கள் மனம் நொந்து போவதுடன்  அத்தியாவசிய தேவையான பொருட்கள் இல்லை என்று பெரும் வருத்தத்துடன் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். பெரும்பாலான மக்கள் நியாய விலை  கடைகளையே நம்பி வாழ்வாதாரத்தை செயல்படுத்தி வருவதால் இந்த நிலை மாறி அனைத்து அத்தியாவசிய பொருட்களும் மக்களுக்கு பயன்படும் வகையில் கிடைக்குமாறு பந்தலூர் பொதுமக்கள் கோரிக்கை தெரிவித்துள்ளனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad