கடித்த பாம்புடன் சிகிச்சிக்கு வந்த பெண்ணால் பரபரப்பு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 2 July 2024

கடித்த பாம்புடன் சிகிச்சிக்கு வந்த பெண்ணால் பரபரப்பு



 கோத்தகிரி அருகே குயின் சோலை பாவக்காடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மனைவி மல்லிகா வயது 50 இருவரும் டேன்டீ டிவிஷனில் தோழிலாளிகளாக பணிபுரிந்து வருகின்றனர்.


வழக்கம்போல் பச்சை தேயிலை தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுப்படனர் அப்போது திடீரென அவரது இடது கையில் கடித்தது அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு உடனே டேன்டீ ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மல்லிகாவை கடித்த பாம்பை லாவகமாக சாக்குப்பையில் போட்டு கொண்டு வந்துள்ளார் மல்லிகாவை கடித்த பாம்பு வைப்பர் வகையை சார்ந்த விஷ பாம்பு என்றனர்.


 கோத்தகிரி லிருந்து தமிழக குரல் செய்தியாளர் C.விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad