எமரால்டு அண்ணா நகர் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
நீலகிரி மாவட்டம் முள்ளிகூர் ஊராட்சிக்கு உட்பட்ட எமரால்டு பகுதியில் இருந்து அண்ணாநகர் செல்லும் வழியில் நேற்று இரவு மரம் சாய்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இரவு நேரம் என்பதால் மரத்தை அகற்ற முடியாத சூழ்நிலையால்... வாகனம் செல்ல மரக்கிளைகளை உடைத்து சிறிய வழி ஒன்றை அமைத்துள்ளனர். தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் இன்று மரத்தை அகற்றி சாலையை சீர்படுத்தி விடுவார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment