ஜெகதளா பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 24 July 2024

ஜெகதளா பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்




நீலகிரி மாவட்டம் ஜெகதளா பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் தங்களது 13 வார்டுகளில் எந்த ஒரு அடிப்படை வசதி மற்றும் வளர்ச்சிபணியும் மேற்கொள்ளவில்லை என்றும் செய்து கொடு செய்து கொடு வளர்ச்சி பணிகள் செய்துகொடு என ஜெகதளா பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் கோஷமிட்டனர். சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. செயல் அலுவலர் அவர்கள் ஜெகதளா பேரூராட்சி மற்றும் கோத்தகிரி (சிறப்புநிலை) பேரூராட்சி இரண்டையும் கவனித்து வருகிறார்.


செயல் அலுவலர் அவர்கள் நேரில் வந்து கோஷமிட்ட பெண்களிடம் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது இனிமேல் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததை அடுத்து முற்றுகையிட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad