நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டு பகுதியில் புதுநகர் செல்லும் பிரதான சாலை மிகவும் குறுகலாகவும் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் சென்று வர மிகவும் சிரமமாக இருந்து வந்தது. இதனை அறிந்த நகராட்சி உறுப்பினர் மக்கள் அவதிக்கு உள்ளகா கூடாது என்று பெய்து கொண்டு இருக்கும் தென் மேற்கு பருவ மழையை கூட பொருட்படுத்தாமல் தற்பொழுது அச்சாலையை விரிவாக்கம் செய்யப்பட்டு சீரமைக்கும் பணி மூன்று நாட்களாக நடைபெற்று வருகின்றது...
இதனால் நகராட்சி உறுப்பினர் அக்கிம் பாபு அவர்களுக்கு பொதுமக்கள் நன்றியினை தெரிவித்து வருகிறார்கள். 12 வது வார்டு உறுப்பினர் அக்கீம் பாபு அவர்களின் பணி மேலும் மேலும் சிறக்க தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்..
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment