உதகையில் ஐந்து மாத பெண் குழந்தை அழுகை சத்தத்தை தாங்க முடியாமல் அடித்துக் கொன்ற தந்தை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 1 July 2024

உதகையில் ஐந்து மாத பெண் குழந்தை அழுகை சத்தத்தை தாங்க முடியாமல் அடித்துக் கொன்ற தந்தை



      

     நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த பழைய ஊட்டி பகுதியை சேர்ந்த பிரேம் (வயது 31).      இவருடைய மனைவி ரம்யா (21)  பிரேம் ஊட்டியில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிகிறார் இவர்களுக்கு கடந்த 1½ வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கேத்தரின் ஏஞ்சல் என்ற ஐந்து மாத பெண் கை குழந்தை உள்ளது. பிரேம் தினமும் காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து வேலைக்கு சென்று விட்டு இரவு 9 மணிக்கு வீடு திரும்புவார் இந்த நிலையில் நேற்றைய முன் தினம் காலை 9 மணிக்கு தான் பிரேம் வேலைக்கு சென்றுள்ளார். அவர் வேலைக்கு சென்று சிறிது நேரத்தில் குழந்தையின் ரெண்டு கன்னங்களும் சிவந்த நிலையில் இருந்தது இதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் ஆனால் குழந்தை இடம் எந்த அசைவும் இல்லாததால் அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல கூறினர் இதன்படி ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை அனுமதிக்கப்பட்டது அங்கு குழந்தையை பரிசோதனை செய்து டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  


குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த ரம்யா இது குறித்து ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் இது குறித்து இன்ஸ்பெக்டர் முரளிதரன் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சந்தேகம் மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்றைய முன்தினம் ரம்யா அருகில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது குழந்தை அழுததால் ஆத்திரமடைந்த பிரேம் குழந்தையை அடித்ததில் மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடிபட்டு ரத்தம் உறைந்து குழந்தை இறந்தது தெரிய வந்தது.  இதை தொடர்ந்து  இந்த சம்பவத்தை கொலை வழக்காக மாற்றி போலீசார் பிரேமை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதை அடுத்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையின் இறப்பை தாங்க முடியாததால்  மீளா சோகத்தில் இருந்த தாயார் ரம்யாவை உறவினர்கள் தேற்றினர்.  பெற்ற குழந்தையை பாராட்டி சீராட்டி கொஞ்சி குலாவி வளர்க்க வேண்டிய தந்தையே அடித்துக் கொண்ட சம்பவம் நீலகிரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே குழந்தையின் தந்தைக்கு மனநிலை பாதிப்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad